ஆளுமை:பாத்திமா ரினோஸா, முக்தார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா ரினோஸா
தந்தை சுலைமான்
தாய் ருகையா உம்மா
பிறப்பு 1982.10.26
ஊர் ஆரிகாமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா ரினோஸா, முக்தார் (1982.10.26) குருநாகல் மாவட்டம் பிரிங்கிரிய தேர்தல் தொகுதியில், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆரிகாமத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுலைமான்; தாய் ருகையா உம்மா. குளி/யகம்வெல முஸ்லிம் பாடசாலையில் கல்விக் கற்றார். இவரின் கணவரின் பெயர் முக்தார். மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், விவாதம், ஊடுருவல், உரையாடல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் எழுத்தாளர். இவரின் ஆக்கங்கள் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவை, வர்த்தக சேவை, தென்றல் சேவை, கொத்மலை சேவை, மலையக சேவை ஆகியவற்றிலும் நவமணி நாளிதழிலும், நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசையிலும், இலங்கையில் வெளியாகும் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துகொண்டுள்ளது. ஏழை வீட்டு ரோஜா என்ற சிறுகதையின் ஊடாக கலை உலகிற்குள் பிரவேசித்தார். இவரின் எழுத்துத்துறையை வளர்த்துக் கொள்வதற்கு பெரிதும் களம் அமைத்துக் கொடுத்தது இலங்கை வானொலி என்பதை நன்றியுடன் நினைகூருகிறார்.

பேனா முனையின் நேசம் எனும் சிறுகதைத் தொகுப்பை 2016ஆம் ஆண்டு எழுத்தாளர் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

வடமேல் மாகாண கலை கலாசார மன்றத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் பேனா முனையின் நேசம் முதல் பரிசை பெற்றது. அதே ஆண்டுக்குரிய சிறந்த நூலுக்கான விருதினையும் இந்நூல் பெற்றது.