ஆளுமை:ரதிதேவி, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரதிதேவி
பிறப்பு 1953.08.04
ஊர் கிளிநொச்சி, பரந்தன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரதிதேவி, கந்தசாமி (1953.08.04 -) கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். இவரின் ஆரம்ப கால எழுத்துக்கள் 1973 இல் வானொலி மூலமே பிரபலம் பெற்றது. 1974 ஆம் ஆண்டு பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார். இவரது முதலாவது சிறுகதையான 'கோபுரம் சாய்கிறது' 1974 ஆம் ஆண்டு வீரகேசரியிலும் முதலாவது நாவலான 'சுமைகள்' 1978 ஆம் ஆண்டு வீரகேசரியின் 55 ஆவது பிரசுரத்திலும் வெளியானது.

இவர் தாமரைச் செல்வி என்ற புனைபெயரில் வன்னியாச்சி, ஒருமழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை போன்ற சிறுகதைத் தொகுப்புக்களையும் வேள்வித் தீ, அவர்கள் தேவர்களின் வாரிசுகள் போன்ற குறுநாவல்களையும் விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், பச்சை வயல் கனவு, வீதியெல்லாம் தோரணங்கள் போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவர் தனது படைப்பாற்றலால் இலங்கை சாகித்திய விருது, இலக்கியப் பேரவையின் பரிசு, சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நூலுக்கான விருது, கலாவல்லிச் சஞ்சிகையின் முதற் பரிசு, வடக்கு- கிழக்கு மாகாண அமைச்சின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான சாகித்திய விருது, இலங்கைக் கலைக்கழகத்தின் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 479-480
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 01-03
  • நூலக எண்: 2033 பக்கங்கள் 13-14
  • நூலக எண்: 82754 பக்கங்கள் 22-23