ஆளுமை:வரதராஜன், டானியல்

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 13 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராஜன்
தந்தை டானியல்
பிறப்பு 1953.10.25
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராஜன், டானியல் (1953.10.25 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை டானியல். இவர் 1965 ஆம் ஆண்டு முதல் சங்கீத வித்துவான் ஏ.எஸ். இராமநாதனிடம் மிருதங்க இசையையும் கடம், கெஞ்சிரா ஆகிய வாத்திய இசைகளையும் கற்று, யாழ்ப்பாணம் கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் தனது மிருதங்க இசை அரங்கேற்றத்தை நிறைவு செய்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையில் பயின்று ஆசிரியர் தரத்தில் சித்தி பெற்றுக் கலா வித்தகர் பட்டத்தைப் பெற்றார்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றம் வருடா வருடம் நடாத்தும் இசை விழாவில் கலந்து சிறப்பிக்கும் இவர், 1977 ஆம் ஆண்டு இம்மன்றத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட மிருதங்க இசைப் போட்டியில் கலந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு முதல் கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் மிருதங்கப் போதனாசிரியராகப் பணியாற்றி வந்த இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் கச்சேரிகளை நிகழ்த்தித் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 127