பகுப்பு:கலைமகள்

From நூலகம்

இலங்கையில் தமிழ்ப்பத்திரிகைகளின் ஆரம்ப கால வருகையின் போதான காலப்பகுதிகளில் 1925 ஆம் ஆண்டில் இருந்து கலைமகள் பத்திரிகையானது கொழுப்பு வெள்ளவத்தையினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராக இ. தம்பிராசா என்பவர் காணப்பட வெள்ளவத்தை திருக்குறள் பயிற்சிக் கழகத்தினர் இதனை வெளியீடு செய்துள்ளனர். அக்கால கட்டத்திலே தமிழ்மொழியும், சைவசமயமும் எல்லோருக்கும் பயந்தரக்கூடிய வகையில் விசேடமான பல கட்டுரைகளைக் கொண்டு மிகவும் தூய தமிழிலும், தமிழ் இலக்கங்கள் பயன்படுத்தப் பட்டும் இது வெளியிடப்பட்டுள்ளது. சைவத்தின் சிறப்புக்கள், சைவப்பெரியார்களின் கருத்துக்கள், மதபோதனைகள், குறள் மற்றும் உரைத்தெளிவுகள் என்பன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

Pages in category "கலைமகள்"

This category contains only the following page.