பகுப்பு:ப்ரியநிலா

From நூலகம்

ப்ரியநிலா இதழானது 1987 முதல் உதயன்வத்தை தெவனகளையில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவொரு காலாண்டுக் கலையிதழ் ஆகும். இதன் ஆசிரியராக ஏ.எஸ். எம்.ரம்ஜான் அவர்களும், உதவியாக திருமதி ரம்ஜான் அவர்களும் காணப்படுகின்றனர். பல்சுவை சார் அம்சங்களுடன் இந்த இதழ் வெளியான போது இஸ்லாமிய விடயங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இஸ்லாமியக் கருத்துக்கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், ஆங்கில இலக்கியங்கள் முதலான விடயப்பொருள்கள் காணப்படுகின்றன.