பகுப்பு:முனைப்பு

From நூலகம்

முனைப்பு இதழானது கிழக்கிலங்கையின் மருதமுனையினைக் களமாகக் கொண்டு 1989 முதல் வெளிவந்த காலாண்டு இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக மருதூர்பாரி அவர்கள் காணப்படுகின்றார். இதனை முனைப்பு கலை இலக்கிய அமைப்பானது மருதமுனை இளம்பிறை அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. பின்னைய கால இதன் வெளியீடுகளில் வெவ்வேறு நபர்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றி உள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை ,கட்டுரை, நூல் மதிப்பீடுகள், நூல் அறிமுகங்கள் என இலக்கியம் சார் ஆக்கங்கள் காணப்படுகின்றன.