ஆளுமை:இராதாகிருஷ்ணன், உருத்திராபதி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:28, 19 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராதாகிருஷ்ணன்
தந்தை உருத்திராபதி
தாய் தையலம்மாள்
பிறப்பு 1943.06.27
இறப்பு 06.09.2015
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராதாகிருஷ்ணன், உருத்திராபதி. (1943.06.27 - 2015.09.06) யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக்கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி; தாய் தையலம்மாள். இவர் வயலின் இசையை ஆரம்பத்தில் தனது தந்தையாரிடமும், திரு. ஜீ. சண்முகானந்தனிடமும் அதன் பின்னர் இந்தியா சென்று வயலின் மேதை எம். எஸ். அனந்தராமனிடமும் கற்றுக் கொண்டார்.

யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பத்து ஆண்டுகளாக வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளில் வயலின் இசைத்து முன்னணி வயலின் இசைக்கலைஞராகத் திகழ்ந்தவர். இந்தியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஜேர்மன் போன்ற நாடுகளிலும் வயலின் இசைத்துள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் வயலின் வாசித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கண்ணன் இசைக்குழுவில் வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றிய இவர், மிருதங்கக் கலைஞர் சிவபாதம், மெல்லிசைப்பாடகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து 'சிவராதாகிருஷ்ணமூர்த்தி' என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவை ஆரம்பித்துக் கச்சேரிகளை நிகழ்த்தினார்.

இவரது தனி இசைக்கச்சேரிகள் 'கானாமிருதம்' என்ற இறுவட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இவருக்கு 'இன்னிசை வேந்தன்', 'இசைஞான கலாநிதி', 'சிவகலாபூஷணம்' போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, நல்லூர் கலாச்சாரப் பேரவை 2005 ஆம் ஆண்டு இவரைக் கௌரவித்துக் கலைஞானச்சுடர் என்னும் விருதினை வழங்கியுள்ளது.


வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 100
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 116-117