ஆளுமை:இராமச்சந்திரன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:22, 22 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமச்சந்திரன்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1941.09.26
ஊர் தம்பாபிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமச்சந்திரன், சின்னத்தம்பி (1941.09.26 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, தம்பாபிட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தனது 21 ஆவது வயதிலிருந்து கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இவர் அதியரசன், பண்டார வன்னியன், அரிச்சந்திர மயான காண்டம், இராஜராஜ சோழன், காத்தவராயன் போன்ற நாட்டுக்கூத்துகளில் பிரதான பாத்திரம் ஏற்று, ஊர்காவற்துறை, நாவாந்துறை, நாவற்குழி, அனலைதீவு, நாரந்தனை, புளியங்கூடல், அராலி போன்ற இடங்களில் தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார். மேலும் 2 ஆவது உலக இந்து மாநாட்டினை முன்னிட்டு ஊர்காவற்துறையில் நடைபெற்ற பிரதேச மட்ட நிகழ்ச்சியில் பண்ணிசைத்துறைக்குத் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

இவரது ஆற்றலுக்காக இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞான கேசரி என்ற பட்டத்தினையும், ஊர்காவற்துறை கலாச்சார சபையினால் கூத்து கலையரசு மற்றும் பண்ணிசை வல்லாளன் முதலான பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 132-133