ஆளுமை:இளைய பத்மநாதன்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 25 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளைய பத்மநாதன்
பிறப்பு
ஊர் நெல்லியடி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அண்ணாவியார் இளைய பத்மநாதன் யாழ்ப்பாணம், நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாடகக்கலைஞர். மெல்பேர்ன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளில் (Performance Studies) சிறப்புப் பட்டத்தையும், மொனாஷ் பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகளுக்கான முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ள இவர், கொழும்பில் அரசாங்க எழுதுவினைஞராகப் பணியாற்றியுள்ளார்.

1960 களில் ஈழத்தின் வடபகுதியெங்கும் தீண்டாமை எதிர்ப்பு விழிப்புணர்வு நாட்டுக்கூத்துக்களை நிகழ்த்தி வந்தார். அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட "கந்தன் கருணை" நாடகத்தில் முக்கிய பங்காற்றியிருந்தார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குப் புலம் பெயர்ந்த இவர், அங்கே பல்கலை அரங்கக் குழுவுடன் இணைந்து Bertolt Brecht என்பவரின் The Exception and the Rule என்ற நாடகத்தின் தமிழ் வடிவமான ஒரு பயணத்தின் கதை, மற்றும் தீனிப்போர், ஏகலைவன் முதலான நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். இவற்றில் 'ஒரு பயணத்தில் கதை' என்ற நாடகத்தை அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரிலும், பெல்பேனிலும் அரங்கேற்றியுள்ளார். இவர் 'காத்தான் வகைக் கூத்து' என்ற நூலையும் ஆக்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 226-227

வெளி இணைப்புக்கள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இளைய_பத்மநாதன்&oldid=185629" இருந்து மீள்விக்கப்பட்டது