ஆளுமை:கிரிதரன், நவரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிரிதரன்
தந்தை நவரத்தினம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கிரிதரன், நவரத்தினம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நவரத்தினம். ஆரம்பக் கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில் கற்ற இவர், தொடர்ந்து யாழ். இந்துக் கல்லூரியிலும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார்.

இவரின் படைப்புக்கள் ஈழநாடு, சிறுவர் மலர், சுதந்திரன், கண்மணி, சிரித்திரன், வீரகேசரி, ஈழமணி கணையாழி, சுபமங்களா, ஆனந்தவிகடன், துளிர், தாயகம், தேடல், சுவடுகள், திண்ணைத் தமிழ் உட்படப் பல பத்திரிகை, சஞ்சிகை மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. மண்ணின் குரல் சிறுநாவலையும் அதி மானுடா கவிதையையும் அமெரிக்கா நாவலையும் இவர் படைத்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்=


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 361