இன்னொன்றைப் பற்றி

நூலகம் தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

நூலகத்தின் 2010 செப்ரெம்பர் மாதத்திற்கான செலவு தர்மதேவி சபாரத்தினம்

ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளது :: இதுவரையான நிதிப் பங்களிப்புக்கள்


இன்னொன்றைப் பற்றி
நூலக எண் 19
ஆசிரியர் சி. சிவசேகரம்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர்தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு2003
பக்கங்கள்viii + 51

வாசிக்க


நூல் விபரம்

கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத்துத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம். பிரதேசம், பால் எல்லைக்கள் உட்பட்டும் அவ்வெலைகளைத் தாண்டியும் வர்க்க ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசை கொடப்பனவாகவும் அமைகின்றன. கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்த படிப்போர் உணரமுடியும். கருத்து நுணக்கங்களினூடாக கவித்துவச் சிறப்பை வாசகர்களுடன் பரிமாறும் ஆற்றல் இவரத கவிதைகளில் நாம் காணலாம்.


பதிப்பு விபரம்
இன்னொன்றைப் பற்றி. சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏஷியன் புக்ஸ், வசந்தம் லிமிற்றெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஜுன் 2003. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). viii + 51 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5*14.5 சமீ. ISBN 955-5637-18-1.

-நூல் தேட்டம் (தொகுதி 5)