பகுப்பு:தமிழ் முரசு (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் முரசு இதழானது பிரான்சில் இருந்து வெளிவந்த மாத இதழாகும். இதன் ஆசிரியராக திரு. உமாகாந்தன் அவர்கள் பணியாற்றியுள்ளார். இதனை ஆரம்பத்தில் பிரான்ஸ் தமிழர் இயக்கம் வெளியிட பின்னைய காலங்களில் தமிழீழ விடுதலைப் பேரவையும் இறுதியில் ஈழமக்கள் தொடர்பு நிலையம்- பிரேஞ்சுக்கிளையினாகும் வெளியிடப்பட்டது. இது ஆரம்பத்தில் 16 பக்கங்களைக் கொண்ட கையெழுத்தினாலான போட்டோக் கொப்பி பிரதியாகவே வெளிவந்தது. பின்னர் 40-50 பக்கங்களைக் கொண்ட தட்டச்சுப்பிரதியாக வெளிவந்தது. 1981 நவம்பர் மாதம் தொடக்கம் முறையாக மாதந்தோறும் வெளிவந்து பின்னைய காலங்களில் இருமாத இதழாக வெளிவந்தது. மொத்தம் 72 இதழ்கள் வெளியாகின. ஆரம்பம் முதல் இறுதி வரை ஈழத்தின் இனமுரண்பாட்டையும், விடுதலைப்போராட்டத்தையும் நோக்காகக் கொண்டே வெளியிடப்பட்டுள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மக்களின் நிலைமையும் அதன் விடுதலைப்போராட்டங்களும் பற்றிய தகவல்கள் கட்டுரைகளும், விமர்சனக்கட்டுரைகளும் மற்றும் அவர்களது மொழிபெயர்ப்புக் கவிதைகள் என்பனவும் இதன் உள்ளடக்கங்களாகக் காணப்பட்டன.

"தமிழ் முரசு (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 55 பக்கங்களில் பின்வரும் 55 பக்கங்களும் உள்ளன.