ஆளுமை:இராமசேது, நாராயணபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமசேது, நாராயணபிள்ளை
தந்தை நாராயணபிள்ளை
பிறப்பு 1941.08.15
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா. இராமசேது (1941.08.15 -) யாழ்ப்பாணம் திருநெவேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நாரயணபிள்ளை. இவர் சிற்பங்களை சீமேந்தினாலும் கழிவுக் கடதாசிகளினாலும் உருவாக்கும் திறமை படைத்தவராவார்.

திருகோணமலை விநாயகர் ஆலயம், மட்டக்களப்பு பாண்டிருப்பு அம்மன் கோவில், முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயம், புதுக்குடியிருப்பு உலகளந்த பிள்ளையார், புதூர் நாகதம்பிரான் ஆலயம், புளியங்குளம் கந்தசாமி கோவில், மட்டுவில் ஞன வைரவர் கோவில், திருநெல்வேலி கண்ணகை அம்மன் கோவில் உட்பட ஈழத்தின் பல கோவில்களிலும் இவர் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் சரஸ்வதி சிலைகளை அமைத்துக் கொடுத்துள்ளார். இவற்றுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறு கோவில்களில் சாஸ்திர விதிகளுக்கு அமைவாக சிற்ப வேலைகளையும், வர்ணம் பூசுதல் வேலைகளையும் அழகுறச் செய்து கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 205