ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:31, 17 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:அசோகாம்பிகை யோகராஜா, ஆளுமை:அசோகாம்பிகை, யோகராஜா என்ற தலைப்புக்கு நகர்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அசோகாம்பிகை, யோகராஜா
தந்தை இளையதம்பி
தாய் கனகம்மா
பிறப்பு 1949.03.02
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அசோகாம்பிகை, யோகராஜா (1949.03.02 - ) மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் கனகம்மா. இவர்மண்டூர் அசோகா, ரேவதி, செந்தில் பிரியா ஆகிய புனைபெயர்களில் எழுதி வந்துள்ளார். தனது ஆரம்பக் கல்வியை மண்டூர் அரசினர் தமிழ்ப் பெண்கள் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்று 1977 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து மண்டூர் மகா வித்தியாலயத்தில் பணி தொடங்கினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற இவர், மட்டக்களப்புப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் பணியாற்றி இறுதியாக மட்டக்களப்புச் சிவானந்தா வித்தியாலயத்தில் பணியாற்றி 2009.03.01 இல் ஓய்வு பெற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான அம்மா சிரிக்கிறாள் தாய்நாடு சஞ்சிகையில் 1970 இல் வெளிவந்தது. இவர் ஆரம்ப காலத்தில் இலங்கை வானொலிக்கு அதிக பங்களிப்பு வழங்கி, வானொலி மெல்லிசை நிகழ்ச்சிகளுக்குப் பல பாடல்களை எழுதியுள்ளார்.

இவர் கொன்றைப்பூக்கள், சிறகொடிந்த பறவைகள், உறவைத்தேடி போன்ற சிறுகதைகளையும் பாதை மாறிய பயணங்கள் என்ற நாவலையும் எழுதியுள்ளார். 1995 இல் நடைபெற்ற மண்முனை வடக்குக் கலாச்சாரப் பேரவையின் முத்தமிழ் விழாவில் பொன்னாடை போர்த்தியும் 1997 இல் மண்டூர் கலை இலக்கிய அவையினரது பாராட்டு விழாவில் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டதுடன் 2001 இல் தஞ்சாவூரில் உதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் விழாவில் தமிழருவி பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 106-110
  • நூலக எண்: 3407 பக்கங்கள் 03-04