ஆளுமை:அஜந்தா, சக்தி பரசுராமன்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:47, 1 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அஜந்தா சக்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஜந்தா சக்தி பரசுராமன்
தந்தை ஞானமுத்து
தாய் மனோன்மணி
பிறப்பு 1959.10.12
ஊர் வாழைச்சேனை, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஜந்தா சக்தி பரசுராமன் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை நகரத்தில் பிறந்த கல்வியியலாளர் ஆவார். இவர் வாழைச்சேனை மகாவித்தியாலயத்திலும், கொழும்பு ரத்மலானை இந்துக் கல்லூரியிலும், வந்தாறு மகாவித்தியாலயத்திலும் கல்வி கற்றார். வெளிவாரிப் பட்டதாரியான இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார்.

மேன்கமம் த. பாடசாலை, கிளிவெட்டி மகா வித்தியாலயம், நெல்லியடி கரவெட்டி மத்திய கல்லூரி , பட்டித்திடர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து பணி செய்துள்ளார். இவர் மனக்கோலம், மனோபாவம் ஆகிய இரு நூல்களையும் படைத்து வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 182