ஆளுமை:அஜந்தா, சக்தி பரசுராமன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஜந்தா சக்தி பரசுராமன்
தந்தை ஞானமுத்து
தாய் மனோன்மணி
பிறப்பு 1959.10.12
ஊர் வாழைச்சேனை, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஜந்தா சக்தி பரசுராமன் (1959.11.12-) மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை ஞானமுத்து; தாய் மனோன்மணி. இவர் வாழைச்சேனை மகா வித்தியாலயத்திலும் கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியிலும் வந்தாறு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். வெளிவாரிப் பட்டதாரியான இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

மேன்கமம் த. பாடசாலை, கிளிவெட்டி மகா வித்தியாலயம், நெல்லியடி கரவெட்டி மத்திய கல்லூரி , பட்டித்திடர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து பணி செய்துள்ளார். இவர் மனக்கோலம், மனோபாவம் ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 182