ஆளுமை:அடைக்கலமுத்து, தம்பிமுத்து

From நூலகம்
Name அடைக்கலமுத்து, அமுதசாகரன்
Pages தம்பிமுத்து
Pages சேதுப்பிள்ளை
Birth 1918.09.15
Pages 2010.10.23
Place நெடுந்தீவு
Category கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அடைக்கலமுத்து, தம்பிமுத்து (1918.09.15 - 2010.10.23) நெடுந்தீவைப் பிறந்து இளவாலையிலும் இலண்டனிலும் வசித்த எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை தம்பிமுத்து; தாய் சேதுப்பிள்ளை. இவர் புலவர் அமுது, இளவாலை அமுது போன்ற பெயர்களால் அறியப்படுகிறார். யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் வித்தியாலயம், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி, கொலம்பகம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி கற்றார். வித்துவான், பண்டிதர் பட்டங்களைப் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

1938 இல் எழுதத் தொடங்கிய இவர் பெருமளவு கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை வீரகேசரி, தினகரன், பாரிஸ் ஈழநாடு, சுதேச நாட்டியம், பாதுகாவலன், கலைமகள், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற இதழ்களில் எழுதியுள்ளார். நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மருதமடு மாதா காவிய மல்லிகை, அன்னம்மாள் ஆலய வரலாறு, இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள், அமுதுவின் கவிதைகள் போன்றவை இவரது நூல்கள். இவரது படைப்புக்களின் பெருந்தொகுப்பாக இளவாலை தமிழ்கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புகள் என்னும் நூல் 1600 பக்கங்களில் வெளியாகியுள்ளது.

1940 இல் இளைஞர் போதினி எனும் பத்திரிகையை இவர் நடத்தியதாக அறியமுடிகிறது. செவாலியே விருது பெற்ற இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது. 2005 இல் கலாபூசணம் விருதும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 90-95
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 395-397
  • நூலக எண்: 3848 பக்கங்கள் 136