ஆளுமை:அருணந்தி, கதிர்காமர் சடையனார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:16, 3 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருணந்தி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணந்தி
தந்தை கதிர்காமர் சடையனார்
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1899.03.25
ஊர் சங்குவேலி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணந்தி, கதிர்காமர் சடையனார் (1899.03.25 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கதிர்காமர் சடையனார்; தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை கந்தரோடை ஆங்கிலப் பாடசாலையிலும் (ஸ்கந்தவரோதயக் கல்லூரி) யாழ்ப்பாண மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானமாணிப் பரீட்சையில் இவர் முதற்பிரிவில் சித்தியடைந்துள்ளார்.

இவர் பரீட்சைக் குழுவின் உறுப்பினராக, கல்வி ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினராக, கல்வி ஆனைக்குழுவின் உறுப்பினராக, பாடப்புத்தக ஆக்க குழுவின் உறுப்பினராக, இலங்கை கல்வி முறை வெளியீட்டின் ஆங்கில தமிழ்ப் பகுதிகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராக இவர் கடமையாற்றியுள்ளார். மேலும் கைத்தொழில் பிரச்சினைக் கூட்ட நிர்வாகத்தில் மத்தியஸ்தகராகவும் இலங்கை போக்குவரத்துச் சபை தொழிலாளர் நீதிமன்ற அங்கத்தினராகவும் இவர் கடமையாற்றியதோடு பல விஞ்ஞான நூல்களை கலாசாலை மாணவர்களின் உபயோகத்திற்காக தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: திருவுடையாள் பக்கங்கள் 28-31