ஆளுமை:அருள்குமரன், தவராசா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:07, 16 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் அருள்குமரன், தவராசா, ஆளுமை:அருள்குமரன், தவராசா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருள்குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு 1984.03.29
ஊர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருள்குமரன், தவராசா (1984.03.29 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த நாடகத்துறைக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் ஆரம்பக்கல்வியை தந்தை செல்வா தொடக்கநிலைப்பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை யா/ யூனியன் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலில் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தையும் பண்பாட்டியல் கற்கைநெறியில் முதுகலைமாணிப்பட்டத்தையும் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்கல்வி டிப்ளேமாவினையும் பெற்றுக் கொண்டுள்ளார். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்துறை ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். கொக்குவில் இந்துக்கல்லூரியில் பகுதிநேர ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் நவீன நாடகத்துறை இணைப்பாளராகவும், சுன்னாகம் பொது நூலகத்தின் கலைகலாசாரக்குழுவின் உப செயலாளராகவும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தெல்லிப்பளை தமிழ் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகவும் புத்தாக்க அரங்க இயங்கம் என்னும் அரங்க நிறுவனத்தினை தனது சகோதரரனான எஸ்.ரி.குமரனுடன் இணைந்து உருவாக்கிப் பல்வேறு தெருவெளி நாடக செயற்பாடுகள், மாணவர்களுக்கான களப்பயிற்சிகள் மேற்கொண்டு வருவதுடன் நிறுனத்தின் நிர்வாக பணிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். இவர் 'வெறுவெளி அரங்க குழுவின்' செயலாளராக இருந்து பல்வேறு செயற்பாடுகளினை மேற்கொண்டுள்ளார். பல்கலைக்கழக காலத்தில் நுன்கலைத்துறையின் வரலாறு என்னும் ஆவணப்படத்தினை எடுத்துள்ளார். நாடகம், ஊடகம், இலக்கியம், விவாதம், வில்லிசை, குறும்படம் என பலதுறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்ற இவர், பல நாடகங்களை மேடையேற்றி பலரது பாராட்டையும் கொண்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான நாடக விழாவில் சகேதரர் எஸ்.ரி.குமரனுடன் இணைந்து நெறியாள்கை செய்த 'கண்டல்' என்னும் நாடகம் தேசிய ரீதியில் தேசிய விருதைப் பெற்றுக் கொண்டது. தேசிய ரீதியில் றோயல் கல்லூரியினால் நடத்தப்பட்ட நாடகப்பிரதியாக்கப் போட்டியில் 2013 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளார். அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் 2016 ஆம் ஆண்டு இவரது நெறியாழ்கையில் நிகழ்த்தப்பட்ட 'ஒரு நதி அழுகிறது' என்னும் சிறந்த தயாரிப்பிற்கான விருது பெற்றுக்கொண்டதுடன் ஒளிவிதானிப்பிற்கான விருதினை பெற்றுக்கொண்டார்.

வலிகாமம் கல்வி வலயத்தினரால் வருடம் தோறும் சிறந்த ஆசிரியர்களினை கௌரவித்து வருகின்ற வேளையில் 2015 ஆம் வலயமட்டத்தில் தெரிவுசெய்யப்ட்ட 92 ஆசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார். க.பொ.த. சாதாரமாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறுவினாவிடைகள் (250) தொகுப்பாசிரியர். க.பொ.த. உயர்தர பிரிவு மாணவர்களிற்கான (நாடகமும் அரங்கியலும்) குறு வினாவிடைகள் (500) தொகுப்பாசிரியர். இசை நாடக கூத்துப்பாடல்கள்- இணை ஆசிரியர்.பண்படு (தெருவெளி ஆற்றுகை பிரதிகளின் தொகுப்பு)- இணை ஆசிரியர்