ஆளுமை:ஆறுமுகம்பிள்ளை, சாமிநாதர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:48, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம்பிள்ளை
தந்தை சாமிநாதர்
தாய் கமலம்
பிறப்பு 1919.05.19
இறப்பு 1993.02.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம்பிள்ளை, சா. (1919.05.19 - 1993.02.07) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சாமிநாதர்; தாய் கமலம். இவர் இந்திய நாதஸ்வரச் சக்ரவர்த்தி திருவாடுதுறை ஆஸ்தான வித்துவான் ரி.என்.ராஜரத்தினம் அவர்களிடம் முறைப்படி குருகுலவாசகப் பயிற்சிப் பெற்றார்.

இவருடைய நாதஸ்வர வாசிப்பானது தனித்துவமுடையதோடு இவருடைய நாதஸ்வரத்தில் வரும் ஒலியானது கிளாரினட் ஷணாய் போன்ற நாத ஒலி வேறுபாடுகளை எடுத்துக் காட்டுவதாய் அமையும். இது இவருடைய வித்துவ சிறப்பிற்கு ஒரு சான்றாகும். இலங்கை இந்திய நாதஸ்வரக் கலைஞர்களுள் பிரபல்யமானவர்களுடன் இவர் சேர்ந்து வாசித்துள்ளார்.

லவிதஸ்வரபூபதி, இசைநாதலயமணி, தேவகான இசைத்திலகம், நாதஸ்வரமஹாவலிகங்கா, நாதஸ்வரவித்வசரப இசை அரசு, பல்லிசைப் புலவர், இசைநாத வாரிதி, ஸாமகானலாவண்ய இசைஞான ஜோதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 54-57