ஆளுமை:இராயப்பு யோசப் அடிகளார்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:50, 19 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராயப்பு யோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராயப்பு யோசப் அடிகளார்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரருட்தந்தை இரயப்பு ஜோசப் அடிகளார் நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் பல தேவாலயங்களின் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய இவர் ஆயராகப் பதவி பெற்று மன்னார் மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இறை சேவையில் பெரும் பணியாற்றி வருகிறார். இவர் இறை பணியோடு பல சமூகப் பணிகளும் செய்துவருவதை இலங்கை வாழ் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய மத மக்களும் நன்கறிவர். மடுத்திருப்பதியிலிருந்து படையினர் அகற்றப்படவேண்டுமென இவர் ஆணித்தரமான குரலில் வாதித்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. கத்தோலிக்க சமயத்திற்கு மட்டுமன்றி தமிழினத்தின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் இவர் பல சேவைகளை ஆற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 132