ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பண்டிதர் குஞ்சித்தம்பி
பிறப்பு
ஊர் தம்பிலுவில்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்டிதர் குஞ்சித்தம்பி கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் கிராமத்தில் பிறாந்தார். மட்டக்களப்பு தூய மிக்கேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் எட்டாவது வரை கற்றுத் தேறினார். பின் மதுரைத் தமிழ்ச் சங்க மாணவனாகி மதுரைத் தமிழ்ச் சங்க கலாசாலையில் கற்றுத் தேறி ஆசிரியராகப் பணி புரிந்தார். அத்தோடு இந்தியாவின் பல இடங்களிலும் ஆசிரியராக பணி புரிந்தார்.

பின்பு தாய் நாடு வந்து மட்டக்களப்பில் சைவமும் தமிழும் வளர்த்தார். சிலகாலம் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராக பணியாற்றினார். 2ம் யுத்தகாலத்தில் திருகோணமலைக் கடற்படையில் எழுத்தாளராக பணியாற்றினார்.

இவர் அலாவுதீன் எனும் நாடகத்தை தமிழில் உருவாக்கி நடித்துள்ளார். இவரால் ஆக்கப்பட்ட பஜனாமிர்தம், வருக்கமாலை ஆகிய பாடல்நூல்கள் 1953ல் வெளிவந்துள்ளன. இவர் தமது நாற்பதாவது வயதிலே விண்ணுலகு சென்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 45
  • நூலக எண்: 2469 பக்கங்கள் 236-240
  • நூலக எண்: 963 பக்கங்கள் 84-85