ஆளுமை:சரஸ்வதி, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 22 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரஸ்வதி கந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரஸ்வதி கந்தசாமி
பிறப்பு 1931.04.05
இறப்பு 1998.04.12
ஊர் இணுவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.சரஸ்வதி (1931.04.05 - 1998.04.12) யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓவியர். கண்ணாடி ஓவியம் வரைதல், மணப்பெண் அலங்கரிப்பு, கோலம் போடுதல், பூக்கள் வடிவமைத்தல், ஓவியம் வரைதல் ஆகிய துறைகளில் ஆற்றல் மிகக் கொண்ட கலைஞராக இவர் விளங்கினார்.

ஆலய நிகழ்வுகள், திருமண வைபவங்கள், கலைவிழாக்கள், அரசாங்க பாடசாலை விழாக்கள் என எல்லா விழாக்களிலும் வாயில் கோலங்கள் போடுவதில் இவர் வல்லமை பெற்று விளங்கியதோடு ஆலயங்களின் திரைச் சேலைகள், சுவர் சித்திரங்கள் வரைவதிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஆரம்பத்தில் தான் வணங்கும் தேவஸ்தானமான வண்ணை ஶ்ரீகாமாட்சி அம்பாள் ஆலயத்தில் சரஸ்வதி, இலட்சுமி, காமாட்சி அம்பாள் படங்களை வரைந்து எல்லோரினது பாராட்டுக்களைப் பெற்ற இவர் ஐந்து திருமுகமும் பத்து திருக்காண்டங்களுடன், 24 தத்துவங்களையும் அகக் கண்ணிலே கண்டு விஸ்வகர்மாவின் திருக்கோலமுடைய ஶ்ரீ காயத்திரி திருவுருவினை மிகச் சிறப்பாக வரைந்த பெருமை இவருக்குரியதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 188