ஆளுமை:சாந்தி, சச்சிதானந்தம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 7 அக்டோபர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சாந்தி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாந்தி
தந்தை சச்சிதானந்தம்
தாய் ஞானரத்தினம்
பிறப்பு 1958.08.14
இறப்பு 2015.08.27
ஊர் ஈச்சமோட்டை
வகை பன்முக ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தி (1958.08.14) யாழ்ப்பாணம், ஈச்சைமோட்டையில் பிறந்தவர். இவரது தந்தை சச்சிதானந்தம்; தாய் ஞானரத்தினம். கொழும்பு புனித பிரிஜெட் கல்லூரியில் இவர் கல்வி கற்றார். மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும் இலண்டன் (Royal Institute of British Architects) கட்டடக் கலைத்துறையில் பட்டம் பெற்றவர் சாந்தி. மனோ ராசிங்கம் இவரின் கணவராவார். கர்நாடக இசையில் முறையாகப் பயிற்சி பெற்றுள்ளார். இலங்கை ரூபவாஹினி நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ளார். மூன்று குழந்தைகளுக்குத் தாயாரான சாந்தி சச்சிதானந்தம். பெண்ணியவாதி, எழுத்தாளர், அரசியல் சமூக ஆய்வாளர் என பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்தியவர் சாந்தி சச்சிதானந்தன். அன்னையர் முன்னணி, மாதர் மறுமலர்ச்சிப் பேரணி ஆகிய பெண்கள் அமைப்புக்களிலும் செயற்பட்டவர். விழுது மேம்பாட்டு மையம் என்ற அரச சார்பற்ற சமூக நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகப் பணியாற்றினார். சாந்தி சச்சிதானந்தன் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். மட்டக்களப்பில் ”மன்று” என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய இவர் கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திப்பணிகளையும் செய்துள்ளார்.