ஆளுமை:சிற்றம்பலம், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:02, 11 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிற்றம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிற்றம்பலம் முருகேசர் சின்னத்தம்பி
தந்தை முருகேசர் சின்னத்தம்பி
தாய் சீனிப்பிள்ளை
பிறப்பு 1908.04.02
இறப்பு 1988..05.18
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு.சி.சிற்றம்பலம் (1908 ஏப்ரல், 02) வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் விவசாயம், வர்த்தகம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் சார் கைத்தொழில், போக்குவரத்து போன்ற பல துறைகளிலும் ஈடுபட்டு கிராமத்தின் முன்னோடி முயற்சியாளனாக திகழ்ந்தவர் ஆவார். மாட்டு வண்டியில் இருந்து புதிய ஜப்பான் லொறிகளை கிராமத்துக்கு இவரே அறிமுகமாக்கியவர். இவர் வியாபாரத்தில் ஈடுபட்ட போது சமயப்பற்று மிக்கவராக இருந்ததால் மக்களிடம் அதிக இலாபம் பெறுவதில்லை. ஆத்மீகவாதியாகவும், காந்தீயவாதியகவும் இவர் திகழ்ந்ததோடு நல்லூர் கந்தன் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டும் விளங்கினார். அதுமட்டுமல்லாமல் மொறிசீயஸ் நாட்டுக்கு பல சமய நூல்களை அனுப்பி அங்கு சைவம் தழைக்க வழிவகுக்கவும் செய்தார். திருநீற்றுப் பூச்சும் கழுத்திலணியும் உருத்திராட்ச மாலையும் கதருடையும் காண்போருடைய உள்ளத்தில் முருகப் பெருமானை காண்பது போல காட்சியளிக்கும் இவரை சிறுவர் தொடக்கம் முதியவர் ஈறாக எல்லோரும் முருகா முருகா என்றே அழைத்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 430-432