ஆளுமை:சிவபாதம், ஐயாத்துரை.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவபாதம், ஐ., ஆளுமை:சிவபாதம், ஐயாத்துரை. என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதம்
தந்தை ஐயாத்துரை
பிறப்பு 1940
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதம், ஐயாத்துரை (1940 - ) அளவெட்டியைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை ஐயாத்துரை. இவர் மல்லாகம் திரு. த. ஆறுமுகம், த. இரத்தினம் ஆகியோரிடம் மிருதங்கப் பயிற்சியைப் பெற்றுப் பின்னர் இந்தியாவில் திருவாவூர் திரு. நாகராஜனிடம் கற்றுள்ளார். இவர் 1960 ஆம் ஆண்டு தனது மிருதங்க அரங்கேற்றத்தை 'இசைமணி' பொன் முத்துக்குமாரின் இசைக்கச்சேரி மூலம் நிறைவு செய்து தொடர்ந்து கலைவிழா, இசைவிழாக்களில் பிரபலமான வித்துவான்களுக்கும், நடன நிகழ்வுகளுக்கும் பக்கவாத்தியம் வாசித்தார். இவர் மிருதங்க வித்துவான் மட்டுமல்லாது தபேலா, உடுக்கு போன்ற வாத்தியங்களைக் கையாளும் திறமையுடையவர். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் “லய வாத்தியத் திலகம்” பட்டத்தையும் இணுவில் பண்டிதர் பஞ்சாட்சரம் “பல்லியக் கலைமணி” பட்டத்தையும் வலிகாமம் வடக்குக் கலாச்சார பேரவையால் “கலைச்சுடர்” பட்டத்தையும் பெற்றார். அத்துடன் இவருக்குக் “கலாபூஷணம்” விருது 2008-12-15 அன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 574


வெளி இணைப்புக்கள்