ஆளுமை:ஜெயலட்சுமி, நடராஜமூர்த்தி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:11, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜெயலட்சுமி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி
பிறப்பு 1940.08.15
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி (1940.08.15 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த இசைக் கலைஞர். 1948ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கிய இவர் 1959 - 1963 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழககத்தில் இசை பயின்று இலங்கை வானொலி, ரூபவாகினி ஆகியவற்றில் மெல்லிசை, கர்நாடக இசை போன்றவற்றில் பங்குபற்றியுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு றோயல் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றியதோடு க. பொ. த. சாதாரண, க. பொ. த. உயர்தர கர்நாடக சங்கீத பரீட்சைகளுக்கும், வட இலங்கை சங்கீத சபை பரீட்சைகளுக்கும் பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

2000ஆம் ஆண்டில் இலண்டன், நியூயோர்க் சென்ற போது அங்கு இடம்பெற்ற நவராத்திரி விழாவிலும், கலை விழாவிலும் பங்குபற்றியதோடு 2002ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, ஆகிய நாடுகளிலும் இவரது இசைக் கச்சேரிகள் நடைபெற்றுள்ளன.

இவரது சேவையைப் பாராட்டி கலையரசு சொர்ணலிங்கத்தின் தலமையில் நடைப்பெற்ற கலைவிழாவில் இசைக்குயில் என்ற பட்டமும், மானிப்பாய் இந்துக் கல்லூரியால் இசையரசி என்ற பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் சங்கீத பூஷணம் மற்றும் கலாபூஷணம் போன்ற பட்டங்களும் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 78-79