ஆளுமை:தையல்நாயகி, சுந்தரம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:45, 11 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தையல்நாயகி, சுந்தரம்
பிறப்பு 1959.05.04
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தையல்நாயகி, சுந்தரம் (1959.04.05 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவர் தனது தாயாரிடம் நாதஸ்வர இசையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். இவரது நாதஸ்வர அரங்கேற்றம் கல்வியங்காடு சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தாயாருடனும் ஏனைய குழுக்களுடனும் இணைந்து பல கச்சேரிகளை நிகழ்த்தியதுடன் ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் தன் திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருக்கு சுவிஸ் பாசல் அம்மன் ஆலயம் 2001 ஆம் ஆண்டு நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தையும் 2003 ஆம் ஆண்டு சுவிஸ் சூரிச் முருகன் ஆலயம் ஸ்வரதிலக பூபதி என்னும் பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 131