நங்கூரம்

From நூலகம்
நங்கூரம்
347.JPG
Noolaham No. 347
Author நளாயினி தாமரைச்செல்வன்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher இமேஜ் & இம்ப்ரெஷன்
Edition 2005
Pages 64

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

இதிலுள்ள 31 கவிதைகளும் காதலைச் சொல்பவை. குறிப்பாக ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணின் பார்வையில் அக்காதல்கள் சொல்லப்படுகின்றன. ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக் காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்து நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல் என்று விரிகின்றன நங்கூரத்தின் காதல் கவிதைகள். நளாயினி யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுப்பிட்டியில் பிறந்து ஆரம்பக் கல்வியை புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தாவிலும், உயர் கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் மேற்கொண்டவர். தனது பதினேழாவது வயதிலிருந்து கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டிவருகின்றார். 1991 முதல் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி.


பதிப்பு விபரம் நங்கூரம். நளாயினி தாமரைச்செல்வன். சென்னை 600 018: இமேஜ் அன் இம்ப்ரெஷன், உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600 079: பாவனா பிரிண்டர்ஸ்). 64 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (4473)