பகுப்பு:சுகந்தம் (இதழ்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

சுகந்தம் இதழானது மட்டக்களப்பு பெரிய கல்லாற்றினைக் களமாகக் கொண்டு 1988ஆம் ஆண்டு முதல் வெளிவந்துள்ளது. இதுவொரு நான்கு மாத கலை கலாசார மறுமலர்ச்சி இதழாகும். "இனமத பேதம் எமக்கில்லை. கலை கலாசாரமே எமதெல்லை" எனும் விழித்தொடருடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கல்லாறு றோசாலய கலை கலாசாரம் பொதுசேவை நிலையத்தின் சஞ்சிகை குழுவினர் மட்டக்களப்பில் புனித செபஸ்தியார் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, இலக்கியம் , கவிதை, நகைச்சுவை நாட்டார் பாடல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"சுகந்தம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.