பகுப்பு:மனவெளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மனவெளி யாழ்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகும். இதுவொரு உளவளத்துணைக்கான இருமாத இதழாகும். இதன் ஆரம்ப கால ஆசிரியராக வைத்திய கலாநிதி. சா.சிவயோகன் அவர்களும் , இணையாசிரியராக திருமதி .தி. பத்மதனேஸ்வரி அவர்களும் காணப்படுள்ளனர். இதனை 15,கச்சேரி, நல்லூர் வீதி சுண்டிக்குளியில் உள்ள உளவளத்துணைக்கும், ஆரோக்கியத்துக்குமான சங்கத்தினரால் உதயன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பின்னைய காலங்களில் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

இவ்விதழானது மனிதரது மனப்பாங்குகள், விழுமியங்கள், மரபார்ந்த நம்பிக்கைகள், காலவழுக்கள் என்பவை தரும் நெரிசல்களைத் தெளிந்த சிந்தனையோடு அகற்றி , வாழ்வை மீளொழுங்கு செய்து வாழ்வதற்கான விழிப்புணர்வு மற்றும் விளக்கக்கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டு வெளிவருகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக உளவளத்துணை சார்ந்த சகல விடயங்களும் காணப்படுகின்றன.

"மனவெளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மனவெளி&oldid=493367" இருந்து மீள்விக்கப்பட்டது