பேச்சு:இலங்கை வாழ் தமிழர் வரலாறு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் தமிழர் இடையீடின்றி வாழ்கின்றனர் என்பதும் அவர்கள் தமக்கெனத் தனியரசொன்றைக் கொண்டிருந்தனர் என்றும் ஆசிரியருடைய கோட்பாடு. புராணம், இலக்கியம், சாசனம், மகாவமிசம் முதலிய சிங்கள நூல்கள், பயணிகள் குறிப்புகள், வரலாற்று நூல்கள் என்பனவற்றை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் போர்த்துக்கேயர் காலம் வரையிலான ஈழத்தமிழர் வரலாற்றை சுருக்கமாக வரைந்துள்ளார். இதன் முதற்பதிப்பு, ஆவணி 1956இல் ஆசிரியரால் கொழும்பு, சுதந்திரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 38 பக்கங்களுடன் வெளிவந்தது. ஆசிரியரின் சங்கிலி என்ற நாடக நூலில் ஒரு பகுதியாகவும் இக்கட்டுரை வெளிவந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.


பதிப்பு விபரம்

இலங்கை வாழ் தமிழர் வரலாறு. க.கணபதிப்பிள்ளை.யாழ்ப் பாணம்: நாயன்மார்கட்டு திருவாட்டி வள்ளிப்பிள்ளை சுந்தரம் பிள்ளை நினைவு வெளியீடு, 2வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி iv + 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21x14சமீ.


நூல் விபரம்

இவ்வரலாற்றுச் சிற்றாய்வு பேராசிரியர் அவர்கள், தனது சங்கிலி நாடகநூலுக்கான முன்னுரையாக 1955 இறுதி முதல் 1956 முதல் மாதத்துக்கிடைப்பட்ட காலத்தில் எழுதியது. இவ்வாய்வு ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து அரசாண்ட அரசர்களின் வரலாற்றைச் சுருக்கமாக விளக்குகின்றது. இந்நூல் ஆவணி 1956இல் முதற்பதிப்பும், 1989இல் இரண்டாம் பதிப்பும் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகியுள்ளது.


பதிப்பு விபரம்

இலங்கைவாழ் தமிழர் வரலாறு. க.கணபதிப்பிள்ளை. கொழும்;பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 72 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப் படவில்லை. அளவு: 18x12.5 சமீ. (NISBN: சாதாரண பதிப்பு, 955 9429 35 3, சிறப்புப் பதிப்பு, 955 9429 36 1)