பகுப்பு:புலரி
From நூலகம்
புலரி இதழ் 2004 ஐப்பசி-மார்கழி இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக தமிழ் ஆசானும் எழுத்தாளருமாகிய ந.குகபரன் விளங்கினார். இணை ஆசிரியராக ராஜகோபால் விளங்கினார். சித்தன்கேணியில் இருந்து இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய இதழாக தன்னை இந்த இதழ் வெளிப்படுத்தியது. இந்த இதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், விமர்சனகள் இடம் பெற்றன. பலரது வரவேற்பை பெற்றதாக இந்த சஞ்சிகை வெளிவந்த போதும் விற்பனை, ஆக்கம் பெறுதல் போன்ற சிரமங்களால் 4 இதழுடன் தனது வருகையை நிறுத்தி கொண்டது.
Pages in category "புலரி"
The following 5 pages are in this category, out of 5 total.