பகுப்பு:கண்மணி (இதழ்)

From நூலகம்

கண்மணி இதழ் 1975 இல் சிரித்திரன் வெளியீடு செய்யும் சிறுவர் இதழாக மாதாந்தம் வெளியானது. இதன் ஆசிரியராக எஸ். சிவஞானசுந்தரம் விளங்கினார். சிறுவர்களுக்கான கதைகள், பாட்டுகள், கவிதைகள், பள்ளி பகுடிகள், புழுகுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகள் என சிறுவர்களுக்கான பல சுவாரசியமான விடயங்களோடு பிரசுரமானது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் இருந்து இந்த இதழ் வெளியானது.