பகுப்பு:தமிழலை
From நூலகம்
தமிழலை சஞ்சிககையானது 1978 காலப்பகுதிகளில் கொழும்பைக் களமாகக் கொண்டு இலங்கை வங்கியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் மாத வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் திருமதி .இ. மனுவேற்பிள்ளை, இ. தியாகராஜப்பிள்ளை, க. திருவருள் வள்ளலார், அ.த. கதிரவேல், வை.கே. மரைக்கார், செல்வி. சி. மதுரநாயகம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதன் ஆக்கங்களினைப் பெரும்பாலும் வங்கிக் கிளஈல் அங்கத்தவர்களே படைத்துள்ளனர். இதன் உள்ளடக்கங்களாக வங்கியின் செயற்றிட்டச் செயற்பாடுகள், கடன் சார் விடயங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலான பல்சுவை விடயங்களும் காணப்படுகின்றன.