பகுப்பு:ஓசை
'ஓசை' இதழானது மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் வெளியிடப்படுகின்ற கவிதைக்கான இதழாகும். இதழின் வெளியீடு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் மூதூர் முகைதீன்.
கவிதைகளுக்கேயான இதழாக, தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. மனிதநேயம் மிக்க சமூகத்தை எதிர்பாத்து "மனிதநேயம் மண்ணில் மலர ஒலிக்கும் ஓசை" என்ற மகுடத்துடன் இதழின் வெளியீடு அமைந்துள்ளது. புதுமுக கவிஞர்கள் தொடக்கம் பிரபல கவிஞர்களுக்குமான களத்தை அமைத்துள்ளது. உள்ளடக்கத்தில் மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள் என்பவற்றுடன் மூதூர் பிரதேச இலக்கிய வெளியீடுகள் பற்றிய தகவல்களையும் தாங்கி வெளிவருகின்றது. ISSN:2012-8126
தொடர்புகளுக்கு:- தொகுப்பாசிரியர், ஓசை, கொணெக்ஸ் வீதி, மூதூர்-05, திருகோணமலை, இலங்கை. T.P:-0094-77-4203500
Pages in category "ஓசை"
The following 11 pages are in this category, out of 11 total.