பகுப்பு:கவிஞன்
இவ்விதழானது 2013 தொடக்கம் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு வெளிவந்த கவிதைச்சிற்றிதழ் ஆகும். இது ஆரம்பத்தில் 20 பக்கங்களைக் கொண்ட மாதாந்த திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த சதாசிவம் மதன் என்பவர் காணப்படுகிறார். இவ்விதழ் 2010 ஆண்டு தொடக்கம் காலாண்டு இதழாக 44 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு தைப்பொங்கல் சிறப்பிதழினையும் வெளியிட்டுள்ளது.
இதன் உள்ளடக்கங்களில் பெரும்பான்மையாக கவிதைகளே காணப்படுகின்றன. அவை மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகளாகவும், கவிதை மற்றும் கவிஞர் விமர்சனங்கள், கலைஞர் குறிப்புக்கள், கிராமிய கலை வடிவக்குறிப்புக்கள்,மேசைக் கிறுக்கல்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான களத்தினை அமைக்கின்றது. அறிமுகப்புதுமுகம் பக்கத்தில் இளம் கவிஞர்களையும், இம்மாதப் பிரபலம் பக்கமூடாக புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றிய குறிப்பும், கவிதை நூல் அறிமுகமும் ஆகவும் காணப்படுகின்றன. தொடர்புக்கு - இதழாசிரியர் - 0773620328
Pages in category "கவிஞன்"
The following 16 pages are in this category, out of 16 total.