பகுப்பு:சிற்பி (இதழ்)

From நூலகம்

2001 ஆம் ஆண்டு தொடக்கம் சிற்பி இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக இ. மாலினி அவர்கள் காணப்படுகிறார். இதனை தென்னிந்தியத் திருச்சபை யாழ் அத்தியட்சாதின ஜீவ ஒளி இலக்கிய மன்றம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் குறித்த மன்றத்தின் கீழ் இயங்கிய இன்பச்சோலை, சமாதானக்கோட்டை, தொல்புரம், ஆனந்த இல்லம் ஆகிய சிறுவர் இல்லப் பிள்ளைகளின் உயரிய எண்ணக்கருக்களைக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. அக்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் உள்ள சிறுவர்களிடத்தே சமாதான நோக்கினை முன்னெடுக்கும் வகையில் சிறார்களின் சுய ஆக்கங்களான கவிதைகள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் என்பன உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

Pages in category "சிற்பி (இதழ்)"

This category contains only the following page.