ஆளுமை:உதயகுமார், பசுபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உதயகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உதயகுமார்
தந்தை பசுபதி
பிறப்பு 1964.05.06
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதயகுமார், பசுபதி (1964.05.06 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பசுபதி. இவர் அ. ச. முருகனந்தம், கா. சிவத்தம்பி போன்றோரிடம் கல்வி கற்றார்.

1980ஆம் ஆண்டுகளில் தனது கலைச்சேவையை ஆற்றத் தொடங்கிய இவர் மேடை நடகங்களை எழுதி நடிகர்களை உருவாக்குதல், வானொலி நாடகத்துறையில் கலைஞர்களை இனம் கண்டு பயன்படுத்தி கலைஞர்களாக மிளிர வைத்தல், வானொலி, பத்திரிகைகளுக்கு நாடகம், சிறுகதை, கவிதை எழுதுதல் போன்ற சேவைகளை இலக்கியத்திற்கு ஆற்றியுள்ளார்.

1999ஆம் ஆண்டில் வானொலிப் பிரதியாக்கம், சிறுகதை போன்றவற்றிற்கு ஜனாதிபதி விருது, மற்றும் பிரதேச மாவட்ட, மாகாண விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 03