ஆளுமை:அப்துல் அசன், ஐதுரூஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் அசன்
தந்தை ஐதுரூஸ்
பிறப்பு 1958.06.25
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் அசன், ஐதுரூஸ் (1958.06.25 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை ஐதுரூஸ். இவர் கிண்ணியா அல் அக்‌ஷா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

1972 இல் எழுதத் தொடங்கிய இவர், இளங்கவி ஹாசன், மதியன்பன், நவரசகவி, கலாவண்ணன், எழில்வாணன் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். நெஞ்சில் மலர்ந்த கவிதைகள், வைகறைப்பூக்கள் ஆகியவை இவரது கவிதை நூல்கள்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 142-144