ஆளுமை:அப்துல் ஸலாம், அப்துல் அலி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் ஸலாம்
தந்தை அப்துல் அலி
பிறப்பு 1962.05.15
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் ஸலாம், அப்துல் அலி (1962.05.15 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் அலி. பெரிய கிண்ணியா அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியராக கம்பகா அல்பத்திரியா மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

1985 இல் எழுதத் தொடங்கிய இவர் கிண்ணியா மாஸ்டர், அபூரஸான் ஆகிய புனைபெயர்களிலும் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், மணிக்கவிதைகள், நூல் ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுவர் கவிதைகள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 133-135