ஆளுமை:அமீர் அலி, மீராசாகிபு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமீர் அலி
தந்தை மீராசாகிபு
பிறப்பு 1960.04.26
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமீர் அலி, மீராசாகிபு (1960.04.26 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மீராசாகிபு. மட்டக்களப்பு ஹிழ்றியா வித்தியாலயம், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் கணித ஆசிரியராக மட்டக்களப்பு அல்-ஹிரா வித்தியாலயத்தில் பணியாற்றியுள்ளார்.

1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் இவர், இளங்கோ அமீர், அமீர் அலி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், மணிக்கதைகள், கட்டுரைகள், கவிதைகள், உருவகக் கதைகள் என்பவற்றை தினகரன், தினபதி, சுடர், இனிமைக்குரல், கலை அமுதம் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். இவரின் முதலாவது கவிதை தினபதி கவிதா மண்டபத்தில் அன்னைக்கு என்னும் தலைப்பில் 1978.05.25 இல் பிரசுரமாகியது. இவரின் சில கவிதைகள் வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கவியரங்குகளிலும் பங்கேற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 78-79