ஆளுமை:அரவிந்தன், குருநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரவிந்தன்
தந்தை குருநாதபிள்ளை
பிறப்பு
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதி வருகின்றார்.

இவரின் சிறுகதைகள் தென்னிந்தியச் சஞ்சிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரின் தொடர் கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றிலும், ஜேர்மனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.

இவர் இதுதான் பாசம் என்பதா, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் உறங்குமோ காதல் நெஞ்சம், உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா, நீர்மூழ்கி நீரில் மூழ்கி முதலான நாவல்களையும் ஆக்கியுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 456