ஆளுமை:அருளம்பலவனார், சுவாமிநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளம்பலவனார்
தந்தை சுவாமிநாதன்
பிறப்பு 1910.04.11
இறப்பு 1966.05.07
ஊர் காரைநகர்
வகை பண்டிதர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளம்பலவனார், சுவாமிநாதன் (1910.04.11 - 1966.05.07) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த பண்டிதர். இவரது தந்தை சுவாமிநாதன். இவர் தனது ஆரம்பக்கல்வி, உயர்கல்வியினை சுப்பிரமணிய வித்தியாசாலையில் கற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று ஆசிரியரானார். 1963 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டிதர் பரீட்சையில் சித்தியடைந்தார்.

பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, திருவாசகம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். பதிற்றுப் பத்தின் உரைவளத்திற்காக இலங்கை சாகித்திய மண்டலத்தினால் ஆயிரம் ரூபா பரிசு பெற்றார். இதனைப் பாராட்டிய காரைநகர் மக்கள் விழா எடுத்துப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கி 'சங்க நூற் செல்வர்' என்ற பட்டமும் அளித்து கௌரவித்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 313-314