ஆளுமை:அஸீஸ், அப்துல் றசீது

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸீஸ்
தந்தை அப்துல் றசீது
பிறப்பு 1948.12.20
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஸீஸ், அப்துல் றசீது (1948.12.20 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கலைஞர். இவரது தந்தை அப்துல் றசீது. இவர் திருகோணமலை குட்டிக்கார அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை, திருகோணமலை கிண்ணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் கிண்ணியா புஹாரி அரபிக் கல்லூரியில் மௌலவிப் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கிண்ணியா உப வலயக்கல்வி அலுவலகத்தில் அரபு-இஸ்லாம் ஆசிரிய ஆலோசகராவார். 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி தினபதி பத்திரிகையில் இஸ்லாமிய பூங்காவில், சமூக ஒற்றுமைக்கு பாக்கியவான்களின் பணி என்னும் தலைப்பில் இடம்பெற்றது. நாடகங்கள் எழுதியும், நடித்தும் உள்ளார். இவரின் ஆக்கங்கள் தினகரன், நேயம், தினபதி போன்ற பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 62-63