ஆளுமை:ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஈழத்துப் பூதந்தேவனார்
தந்தை ஈழத்துப் பூதன்
பிறப்பு
ஊர் ஈழம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன். சங்ககாலத்துப் புலவர். இவரது தந்தை ஈழத்துப் பூதன். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்றுப் புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நற்றிணை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1998 இல் நிகழ்ந்த நினைவுப் பேருரை ஒன்றில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், ஈழநாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பல சான்றுகளை முன்வைத்து எடுத்துக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 37
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 07-15