ஆளுமை:கணபதிப்பிள்ளை, வல்லிபுரநாதபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை வல்லிபுரநாதபிள்ளை
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1845
இறப்பு 1895
ஊர் புலோலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணபதிப்பிள்ளை, வல்லிபுரநாதபிள்ளை (1845 - 1895) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் உடுப்பிட்டி அ. சிவசம்பு புலவரிடத்தில் தமது ஆரம்பக் கல்வியையும், சென்னை சென்று ஆங்கிலத்தையும், வடமொழியையும் கற்றார்.

வில்கணீயம், இரகுவமிசச்சுருக்கம், வாதபுரேசர் கதை, இந்திரசேனை நாடகம் ஆகியன இவரது நூல்கள். இன்னும் சில நூல்களை இவர் இயற்றிய போதும் அவை அச்சேறவில்லை. இவை யாவும் வடநூல் மொழிபெயர்ப்புகள் ஆகும். மனோன்மணி சுந்தரம்பிள்ளை ஆங்கிலமொழியிலிருந்து மனோன்மணியத்தை மொழிபெயர்த்தமையே இவர், வடமொழியிலிருந்து நூல்களை மொழிபெயர்க்க வழியிட்டுக் கொடுத்தது. இவர் வேதாரணியத்திலுள்ள வேதாரணியேஸ்வரருக்கு ஊஞ்சல் பாடியுள்ளார். புலோலி வ.குமாரசாமிப் புலவர் இவரது சகோதரராவார்.

இவர் இந்தியா சென்று காஞ்சிபுரம் பச்சையப்பன் கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராக இருந்து தமிழ் நூல்களை மாணவர்களுக்குக் கற்பித்தார். பின்னர் திருவனந்தபுரத்து மகாராஜக் கல்லூரிக்குப் பிரதம ஆசிரியராகி அங்கு வடமொழி, தென்மொழி நூல்களைக் கற்பித்தார். சென்னையிலிருந்த திராவிடர் வர்த்தக சங்கத்துப் பண்டிதரில் ஒருவராக இவரும் கணிக்கப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 191
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 84-86
  • நூலக எண்: 963 பக்கங்கள் 55-56
  • நூலக எண்: 15226 பக்கங்கள் 77-78