ஆளுமை:கந்தசாமி, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் சரஸ்வதிப்பிள்ளை
பிறப்பு 1952.02.15
இறப்பு 2009.03.10
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, கணபதிப்பிள்ளை (1952.02.15 -2009.03.10) கிளிநொச்சி, பன்றிச்சுட்டான் வடக்கு கண்டாவளையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை கண்பதிப்பிள்ளை; தாய் சரஸ்வதிப்பிள்ளை. இவர் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் கல்வெட்டுக்கள் எழுதுதல், கந்த புராண படிப்பு, பெரிய புராண படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

இவர் கண்டாவளை பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களிற்கான ஊஞ்சல் பாட்டுக்களை எழுதியுள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு விவசாய அத்தியட்சராக இருந்த "ரஞ்சன் விஜயரத்ன" அவர்கள் அறுவடை விழாவில் கலந்து கொண்டிருந்த போது வில்லிசை நிகழ்வொன்றை மேடையேற்றி பலரது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது. இவர் இரண்டு வாரங்கள் எனும் மேடை நாடகத்தை கண்டாவளை, புளியம்பொக்கணை போன்ற பிரதேசங்களில் 1990,1991 ஆண்டு காலப்பகுதியில் அரங்கேற்றி வெற்றி பெற்றவராக விளங்கியவர் ஆவார்.

இவர் தெய்வீக பாடல்கள், குழந்தை பாடல்கள், மானிடவிடுதலை பாடல்கள் என பல வகை பாடல்களை எழுதி நிறைய கையேட்டுபிரதிகளை வைத்திருந்தமையை அறிய முடிகிறது. இவரது "கவிஞர் குஞ்சரக்கண்டு" எனும் நாமமே இன்று வரை நிலைபெற்றுள்ளது. இவர் 2009.03.10 இறைவனடி சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு இக்கலைஞனை கௌரவிக்கும் முகமாக விழாவின் அரங்கினை "கவிஞர் குஞ்சரக்கண்டு அரங்கு" ஆக அமைத்து இக்கலையாளுமையாளனை கௌரவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 01-02