ஆளுமை:கந்தசாமி, நடராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி
தந்தை நடராஜா
தாய் கௌரியம்மா
பிறப்பு 1924.08.08
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, நடராஜா (1924.08.08 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் கௌரியம்மா. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற இவர், பின்னர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்து, மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ். எஸ். சி கல்வி கற்று, கொழும்பு சென்று 1943 இலிருந்து 1953 வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.

தனது பதின்னான்கு வயது முதல் எழுதத் தொடங்கிய இவர், சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ. ந. க தேசாபிமானி இதழில் தொடக்க கால ஆசிரியர்களில் ஒருவருமாவார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 60-62
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 31-36
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 115-132
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 39-42