ஆளுமை:குமாரசுவாமி முதலியார், கதிர்காமபூபதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமி முதலியார்
தந்தை கதிர்காமபூபதி முதலியார்
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1791.08.11
இறப்பு 1874
ஊர் வல்லுவெட்டி, உடுப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசுவாமி முதலியார், கதிர்காமபூபதி முதலியார் (1791.08.11 - 1874) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்த புலவர். இவரது தந்தை கதிர்காமபூபதி முதலியார்; தாய் வள்ளியம்மை. இவர் தனது தாய்மாமன் முத்துக்குமாரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்று புலமையடைந்தார்.

பலவகைக் கவிகளையும் இயற்றும் வன்மை கொண்ட இவர், அருளம்பலக்கோவை, தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல், நல்லைக்கலித்துறை, கந்தவனநாதர் ஊஞ்சல், இந்திரகுமார நாடகம் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 174
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 66-67
  • நூலக எண்: 963 பக்கங்கள் 92
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 114-121